top of page

|| யத்தோ வச்சோ நிவர்தந்தே || - 11

ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே)

விதி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவன முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்று சுவாமிஜியுடன் சில மணிநேரங்கள் வாதிட்ட பிறகு, எனது பணத்தையும் எனது இரண்டு பைகளையும் இழந்தேன். அந்த நேரத்தில் சுவாமிஜி மீது முழு நம்பிக்கையை வைத்து, நான் அவருக்கு பின்னால் நடக்க தொடங்கினேன் .

திருவொற்றியூரில் உள்ள ஒரு பெரிய கோவிலுக்கு சுவாமிஜி எங்களை அழைத்து சென்றார். கோயிலில் பிரமாண்டமான சுவர்களும், நடுவில் ஒரு நீர்நிலையும் (கொனேரு) இருந்தன, அதை சுற்றிலும் படிக்கட்டுகள் இருந்தன. ஹடகேஸ்வரத்தில் நான் அவருக்கு அணிவித்த பட்டுத் துணியை சுவாமிஜி அகற்றிவிட்டு நீரில் நீந்த சென்றார். அந்த பரந்த நீர்நிலையில் சுவாமிஜி ஒரு இடத்தில் தண்ணீரில் மூழ்கி, முற்றிலும் மாறுபட்ட மற்றொரு இடத்தில் மீண்டும் தோன்றினார். சுவாமிஜி தண்ணீரில் நீந்துவதை நான் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சுவாமிஜி என்னிடம் தண்ணீரில் இறங்கும்படி சமிக்ஞை செய்தார். நான், "சுவாமிஜி எனக்கு நீந்த தெரியாது" என்று கூறி விட்டு, படிக்கட்டுகளில் அமர்ந்தேன். சிறிது நேரம் கழித்து சுவாமிஜி தண்ணீரிலிருந்து வெளியேறினார். சுவாமிஜி அங்கேயே இருப்பார் என்று நம்பி, எனது மற்ற இரண்டு பைகளையும் துணிகளையும் விட்டுவிட்டு, குளிக்க படிக்கட்டுகளில் இறங்கினேன். நான் திரும்பி சென்றபோது, ​​சுவாமிஜி மற்றும் ராஜு காரு ஆகியோரை காணவில்லை . நான் சுற்றிப் பார்த்தேன், ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, மக்களிடம் கேட்க எனக்கு உள்ளூர் மொழி தெரியாது. ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு , சுவாமிஜியை தேட ஆரம்பித்தேன். நான் பார்த்த ஒவ்வொரு நபரிடமும் ‘சுவாமி’ என்று கேட்டேன், ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. சுவாமிஜிக்கு நீண்ட தாடி இருப்பதாக நான் நடித்து காட்டினேன் , அதற்கு ஒரு நபர், ‘ஓ சுவாமி ஆ’ என்று கூறி, என்னை ஊருக்கு வெளியே குப்புசாமி என்ற வண்டி உரிமையாளரிடம் அழைத்து சென்றார். ஏமாற்றமடைந்த நான் பின்னர் கோவிலுக்கு திரும்பினேன். நான் அணிந்திருந்த எனது தந்தையின் தங்க மோதிரத்தை விற்று, ஸ்ரீசைலத்திற்குத் திரும்புவதற்குப் பணத்தைப் பயன்படுத்த முடிவு செய்தவுடன், நான் மீண்டும் கோவிலுக்கு சென்றேன். நான் உள்ளே செல்லும்போது, ​​கோயிலில் ஒரு மேடையை நோக்கி ஒரு நீண்ட வரிசை செல்வதை கண்டேன். மேடைக்கு நெருக்கமாக நடந்து சென்றபோது, ​​சுவாமிஜி அங்கே அமர்ந்திருப்பதை கண்டேன், அவருடைய தரிசனத்திற்காக மக்கள் வரிசையில் நின்றிருந்தனர் . சுவாமிஜியைக் கண்டுபிடித்ததில் நிம்மதி அடைந்த நான், அவர் அருகில் செல்ல முயன்ற போது ,தள்ளப் பட்டேன் , அந்த நபர்களில் ஒருவர் என்னை வரிசையில் நிற்கும்படி செய்தார் . சுவாமிஜி இதையெல்லாம் கவனித்தாலும் அமைதியாக இருந்து விட்டார் . எல்லோரும் சென்ற பிறகு, நான் சுவாமிஜி வரை சென்று என் உடைகள் மற்றும் பைகளை தேடி சுற்றிலும் பார்த்தேன். அந்த பக்தர்கள் கூட்டம் சுவாமிஜிக்கு வழங்கிய பணத்தின் மீது என் கண்கள் விழுந்தன. “உன் குளியல் முடிந்ததா ?”, என்று சுவாமிஜி கேட்டார். நான், “ஆம் சுவாமிஜி, என் பைகள் எங்கே?”என்றேன் . அதற்கு சுவாமிஜி, “எனக்கு எப்படி தெரியும்!” என்று பதிலளித்தார். சுவாமிஜி குளித்தபின் கோவிலுக்குள் செல்வதை ஒரு திருடன் கவனித்திருக்க வேண்டும், என் பைகளை கொள்ளையடித்துள்ளான் . “நீ பைகளை இழந்தது பரவாயில்லை. அவற்றுடன் சேர்த்து உன் கெட்ட கர்மாகளையும் தொலைத்தாய் “ என்று சுவாமிஜி கூறினார் . “இந்த பணத்தை எடுத்துக்கொண்டு போய் , தெருவில் உள்ள கடையிலிருந்து ஒரு ஜோடி துணியை நீ வாங்கிக் கொள். இட்லி வாங்கி கொள் , எனக்காக ஒரு ரொட்டி மற்றும் தேநீர் கொண்டு வா ” என்று கூறி அந்த பக்தர்கள் கொடுத்த பணத்தில் கொஞ்சம் எனக்கு கொடுத்தார். திருவெற்றியூரில் அரை நாள் இருந்து விட்டு, நாங்கள் மெட்ராஸுக்கு புறப்பட்டோம்.

நான் சுவாமிஜியுடன் கழித்த ஒவ்வொரு கணமும் அந்த பயணத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவமும் மிகவும் விலைமதிப்பற்றது. ஒரு குருவின் அருள் நம்முடைய ஆணவம், தர்க்கம் மற்றும் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது, எனது பணத்தையும் பைகளையும் இழந்த பின்னரே இதை நான் புரிந்துக் கொண்டேன். அந்த பயணத்தில் பல அனுபவங்கள் மூலம் சுவாமிஜி அறிவைகளை வழங்கினார். ஒரு கௌபீனம் மட்டுமே தரித்து , பணம் எதுவும் இல்லாவிடினும் , பயணம் முழுவதும் எங்களுக்கு தேவையான அனைத்தையும் சுவாமிஜி வழங்கினார். சுவாமிஜிக்கு ஒரு பழம் அல்லது பணம் வழங்கப்பட்டபோதும், அவர் அதையெல்லாம் எங்களுக்கு கொடுத்தார், அதை ஒருபோதும் தனக்காக பயன்படுத்த வில்லை. அவரை நம்பி, அவருடைய பாதையை பின்பற்றுவர்களிடம் சுவாமிஜி காட்டிய கருணைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

மெட்ராஸில், நாங்கள் ஒரு ஹோட்டல் அறையில் தங்கினோம். சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, ஒரு உறவினரை பார்க்க சுவாமிஜி என்னை அவருடன் அழைத்து சென்றார். சுவாமிஜியைப் பார்த்து அவர் மகிழ்ச்சியடைந்தார். அவன் பெயர் வெங்கடராமன் காரு . சுவாமிஜியுடன் தனக்கு இருந்த பிணைப்பு குறித்து அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். வெங்கட்ராமன் காருவிக்கு சுவாமிஜியே மந்திர தீட்சை வழங்கினார்.அவரது சகோதரியின் திருமண பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார், அதற்க்காக சிறிது காலம் வேலை செய்து , திருமணத்தை பிரமாண்டமாக நடத்தினார் . நாங்கள் இரண்டு நாட்கள் வெங்கட் ராமன் காருவின் வீட்டில் தங்கி விட்டு பிறகு ஹோட்டல் அறைக்கு திரும்பினோம், அங்கு ராஜு காரு எங்களுக்காக காத்திருந்தார், பிறகு காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டோம். சுவாமிஜி எங்களை சிவா காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சிக்கு அழைத்து சென்று அவற்றின் முக்கியத்துவத்தை எங்களுக்கு விளக்கினார். அங்கிருந்து ஸ்ரீ காஞ்சி காமகோட்டி பீடம் சென்றோம்.

ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் சுவாமிஜியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தார் . ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் தரிசனம் எனக்கு கிடைத்தது. சிறிது நேரம், அவர்கள் இருவரும் மௌனமாக சங்கமித்து கொண்டனர். அந்த நேரத்தில் சுவாமிஜி ஒரு தெய்வீக பிரகாசத்துடன் தோற்றமளித்தார் . இதைக் கவனித்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி என்னிடம் விசாரித்து சுவாமிஜி பற்றிய விவரங்களை அறிந்து கொண்டார் . நாங்கள் புறப்படுவதற்கு முன்பு, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி நாங்கள் ஒரு தினமாவது அங்கே தங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் , அதற்கு சுவாமிஜியும் உடன்பட்டார் . நாங்கள் காஞ்சி மடத்தில் ஒரு நாள் தங்கியிருந்து விட்டு பிறகு எங்கள் பரம குரு ஸ்ரீ ஓம்காரணந்த சுவாமியின் பிறப்பிடமான கலவையை நோக்கி புறப்பட்டோம். காஞ்சியின் கோயில்களைப் பார்த்த ராஜு காரு பரவச நிலையில் இருந்தார்.சுவாமிஜி அவரிடம் காஞ்சியில் சிறிது நாட்கள் தங்கி அங்கிருக்கும் கோயில்களை பார்த்து விட்டு பிறகு கலவையில் வந்து எங்களோடு சேர்ந்து கொள்ளும் படி கூறினார்.

ஸ்ரீ ஓமகரானந்த சுவாமி, கலவை அருகே உள்ள அகரம் என்ற சிறிய கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற் பெயர் முனுசாமி . மிகச் சிறிய வயதில், அவர் வீட்டை விட்டு வெளியேறி, ஆன்மிக பாதையை தேர்ந்தெடுத்து சென்றார். தவம் செய்ய வேண்டி தென்னிந்தியாவில் மட்டுமில்லாமல் வட இந்தியாவிலும் பல புனித இடங்களிலும் காடுகளிலும் சுற்றுப்பயணம் செய்தார். அவர் இறுதியாக மகாராஷ்டிராவில் உள்ள கணேஷ்புரியை அடைந்தார், இது ஸ்ரீ நித்யானந்த பகவான் தங்கியிருந்த இடமாகும் . ஸ்ரீ ஓம்காரநந்தா அவரை தனது குருவாக கருதினார். ஸ்ரீ நித்யானந்த பகவான் அவருக்காக நிம்போலியில் ஒரு ஆசிரமத்தை கட்டி அவருக்கு ஸ்ரீ ஓம்காரநந்தா சுவாமி என்றும் பெயரிட்டார். அவர் தனக்கென ஒரு ஹோமகுண்டத்தை கட்டி கொண்டு ,அந்த ஹோம விபூதியை தன் உடல் முழுவதும் பூசி கொள்வார் . அந்த காரணத்திற்காக அவர் ராகாடி பாபா என்று ழைக்கப்பட்டார். மராத்தியில், ராக் என்றால் விபூதி என்று பொருள்.


ஶ்ரீ ஓம்காரந்ந்தா சுவாமி ( ராக்காடி பாபா)

தொடரும்

1 Comment


Dhiwan Bhadhur
May 06, 2020

🙏🙏🙏

Like

               Sri Swamy Poornananda Ashram

                          P-4, Contractors Colony, Srisailam Dam East,

                      Kurnool District-518 102.  Phone :  9494561339

Picture1.png
  • Whatsapp
  • Facebook
  • Instagram
bottom of page