top of page

|| யதோ வாசோ நிவர்தந்தே || - 19

Writer: Sriswamypoornananda.orgSriswamypoornananda.org

ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே)


சுவாமிஜியின் வாழ்க்கை கதையை அறிந்து கொள்வதற்கான எங்கள் பயணம் வெற்றிகரமாக ஒரு முடிவை எட்டியது, நாங்கள் ஸ்ரீசைலம் திரும்பும் பயணத்தைத் தொடங்கினோம். சுவாமிஜியின் தபோஸ்தானத்திலிருந்து, குருமாதாவை எங்களுடன் அழைத்துச் செல்ல சுவாமிஜி ஒப்புக்கொண்டதால் நாங்கள் முதலில் சத்தூருக்குச் சென்றோம். குருமாதா சாத்தூரில் இருந்த சுவாமிஜியின் சகோதரர் ஸ்ரீ சங்கரநாராயண காருவின் வீட்டில் தங்கியிருந்தார். ராஜு காருவும் ரயில் நிலையத்தில் சுவாமிஜியுடன் காத்திருந்ததால் தனியாக சங்கரநாராயண காருவின் வீட்டிற்குச் செல்லுமாறு சுவாமிஜி என்னிடம் சொன்னார் . குருமாதாவை எங்களுடன் அழைத்துச் செல்ல , அவருடைய அனுமதியை நாடினோம் என்று நான் சங்கரநாராயண காருவிடன் சொன்னேன். அவர் அதற்கு சம்மதித்து, குருமாதாவின் ஒப்புதலுடன் நாங்கள் அழைத்துச் செல்லலாம் என்று கூறினார். நான் குருமாதாவை வணங்கி, என்னுடன் ஸ்ரீசைலத்திற்கு வரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன், அதற்கு அவர் சம்மதித்து, என்னுடன் உடனடியாக வர தயாரானார்கள் . குருமாதாவும் நானும் சங்கரநாராயண காருவின் வீட்டிலிருந்து ஒரு ஜட்கா வண்டியில் ரயில் நிலையத்தை அடைந்தோம்.


 

சுவாமிஜி ஸ்டேஷனில் எங்களுக்காக காத்திருந்தார். சுவாமிஜி குருமாதாவை அணுகிய போது , ​​அவர்களுடைய பார்வை குறைவாக இருந்ததால் அவர்களால் சுவாமிஜியை அடையாளம் காண முடியவில்லை. சுவாமிஜி ஒரு சாது என்று நினைத்து அவருக்கு வணங்க போனார் . சுவாமிஜி அவரை தடுத்து, ”அம்மா” என்றார் . அது தனது சொந்த மகன் காமேஸ்வரன் என்பதை குருமாதா அப்போது புரிந்து கொண்டார். மிகப் பெரிய மகான்கள் கூட ஒரு தாயின் அன்புக்கு முன் குழந்தைகள் தாம் . இத்தனை வருடங்களுக்குப் பிறகு சுவாமிஜியைப் பார்ப்பது குருமாதாவுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியில் அவர்கள் சுவாமிஜியை தன் அருகில் பிடித்து கொண்டு அழுதார்கள் . சாத்தூர் ரயில் நிலையத்தில் இந்த ஒப்பற்ற விலைமதிப்பற்ற தருணத்தைக் கண்டதும், ராஜு காருவும் நானும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டோம்.


சத்தூரிலிருந்து கிளம்பிய பிறகு நாங்கள் மதுரையில் இறங்கினோம். நாங்கள் அங்கே ஒரு அறையை எடுத்துக்கொண்டு மதுரையில் இரவு கழித்தோம். சுவாமிஜியே குருமாதாவிற்கு புதிய ஆடைகள் அணிவித்து , எங்கள் பயணத்திற்கு அவர்களை தயார் செய்தார். மறுநாள் காலையில், நாங்கள் ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையில் இருந்தபோது, ​​சுவாமிஜி என்னிடம் அன்று எதுவும் சாப்பிட வேண்டாம் என்று கூறினார் . இது சுவாமிஜியின் அறிவுறுத்தலாக இருந்ததால், அதன் மேல் கேள்விகளைக் கேட்காமல் அதைப் பின் பற்றினேன் . மதியம், நாங்கள் இருந்த ஸ்டேஷனில் வடை வாசனை மணக்க முடிந்தது , அனைவருக்கும் புதிதாக தயாரிக்கப்பட்ட வடைகளை வாங்கி வரும் படி சுவாமிஜி என்னிடம் சொன்னார் . சுவாமிஜி ஒரு சிறிய துண்டு வடையை சாப்பிட்டு விட்டு என்னிடம், “இன்று உன் தந்தையின் மாத திதி (மாசிகம்). உன் சகோதரர்கள் வீட்டில் பூஜையை முடித்துவிட்டார்கள் ” என்றார் . உடனே, நான் அந்த காத்திருப்பு அறையில் சுவாமிஜியின் கால்களைக் கழுவி, அவருக்கு முன் சிரம் பணிந்தேன். “விழா மிகச் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. உன் தந்தை முக்தி அடைந்தார் ”, என்றார் சுவாமிஜி. ஒரு குருவின் சன்னிதியில் நம் முன்னோர்களுக்கு இதுபோன்ற சடங்குகள் செய்யப்படும்போது, ​​மூதாதையர்கள் முக்தியை அடைவார்கள் என்று குருச்சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் மூலம், சுவாமிஜி நம் முன்னோர்களுக்கு மாதாந்திர மற்றும் ஆண்டு விழாக்களைச் செய்வதன் முக்கியத்துவத்தை எனக்கு கற்றுக் கொடுத்தார்.


நாம் சுவாமிஜியின் சன்னிதியை அடைந்தவுடன், அவர் அவரவர் வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிய அம்சத்தையும் கவனித்து, முக்தியின் பாதையில் நம்மை வழிநடத்துகிறார் என்பதைக் காட்ட இது ஒரு எடுத்துக்காட்டு. நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, செப்டம்பர் மாதம் என் தந்தை காலமானார். சுற்றுப்பயணத்தில் முழுமையாக ஒன்றியிருந்ததால் , மாதாந்திர விழா பற்றி நான் மறந்துவிட்டேன். இருப்பினும், சுவாமிஜி அதை நினைவில் வைத்துக் கொண்டார், என் மீதும் என் குடும்பத்தினரின் மீதும் அவருடைய கிருபையைக் காட்டினார்.


மதுரையிலிருந்து, நாங்கள் மற்றொரு ரயில் நிலையத்தில் நின்று ஓங்கோலை அடைந்தோம், பின்னர் ஸ்ரீசைலத்திற்கு பஸ்ஸை எடுத்தோம். சுவாமிஜிக்கு தெரிவிக்காமல் நாங்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய விரும்பினோம், ஆனால் அவர் எங்களுடன் வந்து அவரது பிறப்பு, குழந்தைப் பருவம் மற்றும் தவம் தொடர்பான அனைத்து முக்கிய இடங்களையும் காட்டினார். நாங்கள் பார்வையிட்ட ஒவ்வொரு புனித ஸ்தலத்தின் வரலாற்றையும் சுவாமிஜி அவர்களே விவரித்தார். சுவாமிஜியின் ஆசீர்வாதத்தால், பல பெரிய மகான்களின் தரிசனமும் எங்களால் பெற முடிந்தது. எல்லா பெரிய மகான்களும் சுவாமிஜி மீது பொழிந்த அன்பையையும் மற்றும் அவர் மீது காட்டிய மரியாதையையும் கண்டு நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம்.


பல நல்ல அனுபவங்களின் மூலம்,ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டம் இருந்தால் எதுவும் நடக்கலாம் என்று சுவாமிஜி எனக்குக் கற்றுக் கொடுத்தார். பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ ராக்காடி பாபாவின் விலைமதிப்பற்ற பாதுகைகளுக்கும் மற்றும் குருமாதாவிற்கும் சேவை செய்வதற்கான வாய்ப்பை பெற்றனர்.

நாங்கள் முற்றிலும் பணம் இல்லாமல் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தோம், எந்த பிரச்சனையும் சந்திக்காத நிலையில், எங்கள் அன்பான குருமாதா மற்றும் எங்கள் பரமகுருவின் விலைமதிப்பற்ற பாதுகைகளுடன் ஸ்ரீசைலம் திரும்பினோம்.


சங்கரநாராயண காருவின் குழந்தைகளுடன் குருமாதா பர்வதவர்தினி காரு

 

தொடரும்





Comments


               Sri Swamy Poornananda Ashram

                          P-4, Contractors Colony, Srisailam Dam East,

                      Kurnool District-518 102.  Phone :  9494561339

Picture1.png
  • Whatsapp
  • Facebook
  • Instagram
bottom of page